ஆண் பெண் குழந்தைகள் பிறக்கும் விதம் பற்றி ஜோதிடம் கூறுவது

ஆண் பெண் குழந்தைகள் பிறக்கும் விதம் பற்றி ஜோதிடம் கூறுவது



ஆண் பெண் குழந்தைகள் பிறக்கும் விதம் பற்றி ஜோதிடம் கூறும் கருத்துகளில் முக்கிய விதி ஒன்று

அதை பார்ப்பதற்கு முன் பழைய ஒரு செய்யுளை பார்த்துவிட்டு பின் ஜோதிட விதியை பார்ப்போம்.



அந்த செய்யுள் -



     பாயும் வெண்புனல் செம்புன லினுமிகப் பரவின்

     ஏயு மாண்சுரோ ணிதமிகிற் பெண்ணிகர்த் திரண்டுந்

     தோயு மேல்அலி யாம்! பிதா நுகர்சுவை பற்றிப்

     போயுள் வெண்புனற் பட்டுயிர் அனைகருப் புகுதும்.



பொருள் -

புணர்ச்கிக் காலத்தில் பெண்ணின் சுரோணிதத்தினும் ஆணின் சுக்கிலம் மிகுந்து கருப்பையிற் சென்றால் ஆண் கரு உருவாகும் பெண்ணின் சுரோணிதம் மிகுந்தால் பெண் கரு உருவாகும். இரண்டும் ஒத்திருந்தால் அலி கரு உருவாகும்.



வெண்புனல் - சுக்கிலம் இதற்கு காரகத்துவம் பெற்றவர் ஆணிற்கு சுக்கிரன் மற்றும் 5,7,8 க்குடையவர்கள்

செம்புனல் - சுரோணிதம் இதற்கு காரகத்துவம் பெற்றவர் பெண்ணிற்கு செவ்வாய் மற்றும் 5,7,8 க்குடையவர்கள் ஆகிறார்கள்.
.
 

0 Response to "ஆண் பெண் குழந்தைகள் பிறக்கும் விதம் பற்றி ஜோதிடம் கூறுவது"

கருத்துரையிடுக

Powered by Blogger