ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 6...


ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(6)
யார் விழிப்பில் அறிந்தார், தூக்கத்துள் ஒளிந்தார்
யார் விழிப்பிலும் அறிவார், தூக்கத்திலும் அறிவார்
யார் தூக்கத்தில் சுவாசித்தார், உண்டதை செரித்தார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who aware in the wake? Who unaware in the sleep?
Who aware even in the wake and also awake in the sleep?
Who breathe in the sleep? Who digest to food in the sleep?
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
யார் விழிப்பு அல்லது முழிப்பு நிலையில் [சமஸ்கிருதத்தில் இதை ஜாக்ரத் என்பர்] விடயங்களை அறிந்து கொண்டிருப்பது, யார் தூக்க நிலையில் [சமஸ்கிருதத்தில் இதை சுஷுப்தி என்பர்] விடயங்களை அறிய முடியாது ஒளிந்து கொண்டார், யார் விழிப்பு அல்லது முழிப்பு நிலையிலும் அறிந்தவராய் இருந்தார்,  யார் தூக்க நிலையிலும் அறிந்தவராய் இருந்தார், தூக்கத்தில் அறிவே இல்லை என்பது விஞ்ஞான அடிப்படை ஆனால் மெய்ஞானத்தில் தூக்கும் போது சுவாசம் முறையாக நடப்பதற்கும் உண்ட உணவுகளை முறையாக செரிப்பதற்க்குமான அறிவு இருந்து எப்போது அதை செய்து வருகிறது என்பது மெய்ஞானம் அவ்வாறு தூக்கத்தில் சுவாசம், செரிமானம் போன்றவற்றை செய்தவர் யார், ஒருவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்றால் உணர்வார் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 6..."

கருத்துரையிடுக

Powered by Blogger