ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 5 - பரிபாலஜீவன யோகம், குருசந்திர யோகம்….

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 5 - பரிபாலஜீவன யோகம், குருசந்திர யோகம்….

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

பரிபாலஜீவன யோகம்
ஐனன லக்னத்திற்கு 10 ஆம் வீடாம் ஜீவன ஸ்தானத்தில் லக்ன சுபர், யோகர்கள் ஆட்சி உச்சம் ஆனால் அல்லது நட்பு ஸ்தான நட்பு கிரங்களுடன் சேர்ந்து இருந்தால் இந்த பரிபாலஜீவன யோகம் ஏற்படும், இது சிலர் சந்திரனுக்கு பத்தில் இருந்தாலும் இந்த பரிபாலஜீவன யோகம் ஏற்படும் சொல்கிறார்கள் ஆனால் அந்த அளவில் சிறிய பலனே தரும்.

இதன் பலன்கள் -
இந்த யோகம் ஏற்பட்ட ஜாதகர் புகழ் மற்றும் புகழ் பெறும் நீடித்த செல்வம், வளமான வாழ்க்கையை அடைய வைக்கும், அதிகாரம் செல்வாக்கு, இலட்சியம் வெற்றி,  உயர் பொறுப்புகள், நிர்வாக தொழில் யோகம், புனித இடங்களுக்கு யாத்திரை, அரசு மரியாதை, ஆன்மீக மத செயல்பாடுகள் அதனால் பெறும் கவுரவம் ஆகியவற்றை தரும்.
பரிபாலஜீவன யோகம் ஒரு வகை உதாரண படம்

 

 
குருசந்திர யோகம்
ஐனன ஜாதகத்தில் குருவிற்கு திரிகோண ஸ்தானமான 5ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களில் சந்திரன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெற்றால் இந்த குருசந்திர யோகம் ஏற்படும், இதில் இரண்டு கிரகங்களும் லக்னத்திற்கு 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் வரக்கூடாது வந்தால் யோகம் பலிக்காது.

இதன் பலன்கள் -
இந்த யோகம் ஏற்பட்ட ஜாதகர் வாழ்க்கை சீரும் சிறப்பும் ஆக இருக்கும், வாழ்வில் பெரிய துயரங்களோ, இடர்களோ வராது, ஒழுக்கும் நல்ல பண்புகளும் உள்ளவர், கல்வியறிவு உலக அறிவு நிறைந்தவர், நிம்மதி நிறைந்த மனமும் வாழ்க்கையும் அமையும்.
குருசந்திர யோகம் ஒரு வகை உதாரண படம்
 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சூரியன் நான்காம் வீட்டில் (4ல்) இருந்தால்...


ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஏ.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) ஜாதகம் கணிப்பு - இசைத்துறை, பாடகர், தாள இசை...


.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) ஜாதகம் கணிப்பு - இசைத்துறை, பாடகர், தாள இசை...

இந்தியத் திரைப்படத்தின் சிறந்த இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவரும், இசைப்புயல் என்று தமிழர்களால் பாராட்ட படுபவரும் உலக அளவில் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுபவரும் ஆன . ஆர். ரகுமானின் ஜாதகத்தின் மூலம் இசைத்துறை, பாடகர், தாள இசை ஆகிய துறைகளில் சாதிப்பதற்க்கான ஜோதிட அமைப்புகளை பார்க்கலாம்.

.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) ஜாதகம்
 
முதலில் இவர் சிறு வயதிலேயே தந்தையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது இப்படிபட்ட துயரம் ஏற்பட்டதற்க்கான ஜாதக அமைப்புகள் ஆவது இவரின் ஜாதகத்தில் லக்னத்தின் படி தந்தையின் காரகத்துவம் பெற்ற குரு லக்ன பகை சாரம் பெற்றும் மேலும் பொதுவான தந்தைகாரகனான சூரியன் 9ல் அமைய பெற்றும் இவர்கள் இருவரும் நவாம்சத்தில் 6ல் மறைவு காண்பதும் முக்கிய காரணங்கள் ஆகும், சூரியன் 9ல் அமைய பெற்றது நல்லது தானே என நீங்கள் நினைக்கலாம் ஆம் நல்லது தான் ஆனால் காரகோ பவ நாஸ்தி என்ற அடிப்படையில் தந்தையின் அமைப்புக்கு கெடுதி, மேலும் சூரியன் நவாம்சத்தில் நீசமும் அடைகிறார்.

மதமாற்றம், இளமையில் வறுமை என இப்படி நிறைய விஷயங்களை இந்த ஜாதகத்தில் சொல்லாம் இருந்தாலும் நாம் எடுத்துக் கொண்ட இசைத்துறை சம்பந்தபட்ட விஷயங்களை மட்டும் பார்போம் இசைத்துறையில் சாதிப்பதற்க்கு 2,3,5,11 ஆகிய ஸ்தானங்கள் நன்றாக அமைய வேண்டும் மேலும் அதன் ஸ்தானாதிபதிகளும் நன்றாக அமைய வேண்டும், பிறகு சுக்கிரன், குரு, சனி ஆகிய கிரகங்கள் மிக பலமாக அமைய வேண்டும்.

இவரின் ஜாதகத்தில் பாட்டுக்கு காரகத்துவம் பெற்ற இரண்டாம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 8ல் மறைந்தாலும் நட்பு சாரம் பெற்று 7 ஆம் பார்வையாக இரண்டாம் ஸ்தானத்தை பார்க்கிறார் அதுபோக நவாம்சத்தில் உச்சமும் அடைகிறார், அதுபோக சஷ்டாம்சம், பாத துவைதாம்சம், அஷ்டாம்சம், துவாதம்சம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் உச்சமும் ஆட்சியும் அடைகிறார், சுக்கிரன் இப்படி பலம் பெற்றதால் நல்ல வசீகர குரலும், பாடும் பாவத்தாலும் அனைவரையும் கவர்ந்தார்.

முன்றாம் ஸ்தானம் இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை ஆகியவற்றை காட்டும் அந்த ஸ்தானாதிபதி புதன் 3,6 க்குடையவர் 8ல் அமைந்து விபரீதராஜயோகத்தையும், உடன் நட்பு கிரகமான சுக்கிரனுடன் சேர்ந்து வலுத்தும் உள்ளார் மறைந்த புதன் நிறைந்த அறிவு என்று பழம் வாக்கும் சொல்வதுண்டு. சில அம்சங்களிலில் நீசமும் அடைந்து தனது தீய காரகத்துவத்தை இழப்பதால் எதிரிகள், ரோகம் ஆகிய தொந்தரவுகள் பெரிய அளவில் இல்லாத நிலை ஏற்பட்டது.

இவரின் ஜாதகத்தில் மற்றவரை மகிழ்விக்கும் ஸ்தானமான 5ஆம் வீட்டின் அதிபதி சூரியன் 5க்கு 5ஆம் திரிகோண ஸ்தானமான 9ல் நட்பு வீட்டில் பலமாக உள்ளார் அவருக்கு இடமளித்த குரு லக்னத்தில் இருந்து 5 ஆம் பார்வையாக 5ஆம் ஸ்தானத்தையும் பார்க்கிறார், அதுபோக சூரியன் இரண்டாம் ஸ்தானாதிபதி சுக்கிரனின் சாரமும் பெறுகிறார், 11 ஆம் அதிபதியான சனியால் 7ஆம் பார்வையாக 5ஆம் ஸ்தானத்தையும் பார்க்கிறார் அதனால் இசைத்துறையால் மக்களை மகிழ்விக்கும் பணியை செய்துவருகிறார்.

இவரின் ஜாதகத்தில் இசையமைத்தல், இசைகருவிகளை மீட்டுதல் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்ற 11 ஆம் ஸ்தானாதிபதி சனி பகவான் 11ல் ஆட்சி பெற்று உள்ளார் பாதகாதிபதியானதால் ஆரம்பத்தில் சில இடர்களை கொடுத்தார், இருந்தாலும் சதுர்பாத துவைதாம்சம், திரிம்சாம்சம், அஷ்டாம்சம், பஞ்சாம்சம், திரேக்காணம் ஆகிய அனைத்து அம்ச சக்கரங்களிலும் உச்சமும் ஆட்சியும் அடைகிறார் இதன் மூலம் பலமான வர்க்கோத்தம யோகம் பெற்றுள்ளது அதாவது வர்க்கோத்தம பலம் பெறுவதன் மூலமாக சனி பகவான வெறும் மேலொட்டமான பலத்தை தண்டி ஆழமான பலத்தை பெறுகிறார், மேலும் அது அவருக்கு தொழில் காரகரும் ஆவதால் இடர்களுக்குபின் சனி பகவான் பலமான யோகத்தை தருவார் அதனால் தன் இசைத்துறையில் சிறந்த திறமையும் பெற்று அந்த இசைத்துறையால் நிறைந்த செல்வத்தையும், உலக புகழையும் பெற்றுள்ளார், சனி ஒரு தொண்டு கிரகம் என்பதால் வரும்காலத்தில் சமூக தொண்டுக்காகவும், தானதர்மம் செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபடுவார். மேலும்
இராகுவின் சாரமும் பெற்ற சனி ஒரு இரவு கிரகம் அதனால் இரவில் இசை அமைப்பதில் ஆர்வம் கொண்டார்.

சுக்கிரனின் சாரம் பெற்ற குருவின் திசையில் புதனின் புத்தியில் இசைத்துறையில் இவரின் வெற்றிகள் ஆரம்பித்தன, இரண்டில் அமர்ந்த இராகுவின் சாரம் பெற்ற மிகபலமான சனியின் திசையில் உலக புகழும், தனது இசையால் 2009ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதும், 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது என பல விருதுகளையும் குவித்து கொண்டு வருகிறார். அடுத்து வருகிற புதன் திசையிலும் நல்ல புகழையும், நிறைந்த செல்வங்களை சேர்ப்பார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…

ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்


முதலில் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உச்ச பலம் பெற்ற ஒரு கிரகம் தன் உச்ச பலத்தை செயல்படுத்த முடியாத சில அமைப்புகளும், நீசம் அடைந்த ஒரு கிரகம் சில அமைப்புக்களால் சிறப்பான பலன்களை தருவதும் நம் அனுபவ உண்மை அதனால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனிதனியாக தக்கவாரு அவைகள் மாறுபடும் தன்மை கொண்டவை எனவே ஆட்சி, உச்ச பலத்தை ஒருவர் அனுபவிக்க முடியாமலும் போகலாம் அல்லது குறைவாக அனுபவிக்கலாம், அல்லது அந்த முழுமையான திசா பலன்கள் இன்னும் வராமலும் இருக்கலாம்.

செவ்வாயின் ஆட்சி வீடு மேஷம், விருச்சிகம் ராசி

தன்னம்பிக்கையும் முன்றாம் இடமும்…

தன்னம்பிக்கையும் முன்றாம் இடமும்

எவ்வளவு பலம் பெற்ற ஒருவருக்கும் தன் மீது நம்பிக்கையில்லை என்றால் அவரால் வாழ்வில் சாதிக்க முடியாது எனவே தன்னம்பிக்கை மிகவும் முக்கியம், சரி தன்னம்பிக்கைகும் ஜாதகத்திற்கு என்ன சம்பந்தம் என்று கூட சிலர் நினைக்கலாம், எமது கருத்தை சொல்கிறேன் தன்னம்பிக்கை மூன்று விதமாக ஒருவருக்கு ஏற்படலாம்.



  1. தன்னம்பிக்கை அவரின் பிறப்பிலிருந்து அதாவது அவர் வாழ்ந்த குழந்தைபருவ சூழலில் இருந்தே அவருக்கு தன்னம்பிக்கை பலமாக இருக்கலாம் அதனால் வெற்றி தோல்விகள் மாறிமாறி வரும் போதும் அவர் தன்னம்பிக்கை குலையாமல் இருப்பார்.
  2. தொடர்ந்து வெற்றியாளனாக எடுத்த காரியங்களையெல்லாம் வெற்றிகரமாக மாற்றிக் கொண்டு வந்தவருக்கு தன்னம்பிக்கை பலமாக இருக்கலாம்.
  3. தொடர்ந்து தோல்விகளை சந்தித்தவர் சிறிய வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு தன்னம்பிக்கை பிறக்கலாம்.



என்ன இப்படி சொல்லகிறீர்கள் நான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த போதும் என் தன்னம்பிக்கை குலையாமல் வைத்திருக்கிறேனே என்று சிலர் சொல்லாம்!



சரி தான் ஆனால் வெற்றியை ருசிக்காமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தவரின் தன்னம்பிக்கையை நாம் வாழும் சமூகத்தின் கண்களுக்கு தெரியாது எப்போது ஒருவன் வெற்றியை ருசிக்கிறானோ அப்போதே குடும்பமும் வாழும் சமூகமும் அவரை கவனிக்கும் அவரின் தன்னம்பிக்கையையும் பாராட்டும் முயற்சியை மேச்சும்.



இதில் இருந்து தன்னம்பிக்கையும் அதனால் உண்டான முயற்சியும் அதற்க்கான விளைவான வெற்றியும் இம்மூன்றின் முக்கியத்துவமும் அது வாழ்க்கையில் எவ்வளவு தேவையானது என்பதை உணர முடிகிறது.



இப்போது எந்த ஒருவரின் ஜாதகத்திலும் தன்னம்பிக்கை, முயற்சி, வெற்றி ஆகிய மூன்றின் பலத்தை காட்டும் ஸ்தானம் லக்னத்திலிருந்து மூன்றாம் ஸ்தானம் மற்றும் ஒன்பதாம் ஸ்தானம், இந்த இரண்டு ஸ்தானங்களும் நன்றாக அமைய வேண்டும் மற்றும் அந்த ஸ்தானாதிபதிகளும் பலமாக அமைய வேண்டும் அது போக செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும். அதே போல் 11 ஆம் ஸ்தானம் அதன் அதிபதியும் எந்த விதத்திலும் கெட்டு விடக்கூடாது.



உதாரணமாக ஜாதகத்தில் தன்னம்பிக்கை, முயற்சி, வெற்றி ஆகிய மூன்றின் சிறப்பான பலத்தை காட்டும் சில அமைப்புகள் கூறுகிறேன் : -



மூன்றாம் ஸ்தானாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று அவரை செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்களின் பார்வை பலம் பெறுவதும்.



மூன்றாம் ஸ்தானத்தில் லக்ன சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அமைவதும், சுய நட்சத்திர சாரங்கள் பெறுவதும்.



ஒன்பதாம் ஸ்தானத்தில் லக்ன சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்களின் பலமான பார்வை மூன்றாம் ஸ்தானம் பெறுவதும்.



மூன்றாம் ஸ்தானாதிபதியும் ஒன்பதாம் ஸ்தானாதிபதி மற்ற அம்ச சக்கரங்களில் ஆட்சி, உச்சம் பெற்று சிறப்பாக அமைய பெறுவதும்.



மூன்றாம் ஸ்தானாதிபதியும் ஒன்பதாம் ஸ்தானாதிபதியும் லக்னத்திலிருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைய பெறுவதும்.



சூரியன், குரு, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களுக்கும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் செவ்வாய் பலம் பெறுவதும்.



ஜாதகத்தில் தன்னம்பிக்கை, முயற்சி, வெற்றி ஆகிய மூன்றின் சிறப்பான பலத்தை காட்டும் சில அமைப்புகள் ஆகும் இன்னும் நிறைய உள்ளது அதே போல் இப்படி அமைய பெற்ற ஜாதகத்தில் மற்ற அம்ச சக்கரங்களில் கெட்டுவிட்டால் பலன்கள் முழுமையாக கிடைக்காது.
  • தன்னம்பிக்கை ஒருவரின் பிறப்பிலிருந்து பலமாக இருப்பதற்கு ஒரு உதாரணமாக ஜாதகத்தில் மூன்றாம் ஸ்தானாதிபதி லக்னத்தில் ஆட்சி, உச்சம் பெற்று அமைவது இத்தகைய நிலையை ஏற்படுத்தும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் கேது மூன்றில் (3ல்) இருந்தால்

ஜாதகத்தில் கேது லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -
கேது மூன்றில்  3ல், 3ஆம் வீட்டில் இருந்தால்   Ketu in 3rd house in Tamil  


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger