பெண் அஸ்வினி - ஆண் ரேவதி - திருமண நட்சத்திர பொருத்தம்...

பெண் அஸ்வினி - ஆண் ரேவதி - திருமணப் பொருத்தம் நட்சத்திர பொருத்தம்...
முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் அஸ்வினி நட்சச்திரம் - ஆணின் ரேவதி நட்சச்திரம் எண்ண 27 ஆக வருவதால் ஆண் பெண் இருவருக்கும் வெவ்வேறு ராசியானால் தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்

இதில் பெண்ணின் அஸ்வினி நட்தச்திரம் தேவ கணம் - ஆணின் ரேவதி நட்சத்திரம் தேவ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் அஸ்வினி நட்சச்திரம் - ஆணின் ரேவதி நட்சச்திரம் எண்ண 27 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் அஸ்வினி நட்சச்திரம் - ஆணின்  ரேவதி நட்சச்திரம் எண்ண 27 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் அஸ்வினி நட்சச்திரம் மிருகப் பிரிவு குதிரையாகும் - ஆணின் ரேவதி நட்சச்திரம் மிருகப் பிரிவு யானை ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மேஷ இராசி, ஆண் மீனம் இராசி பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது  12 ஆக வருவதால் இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மேஷ இராசி அதிபதி செவ்வாய் ஆண் மீனம் இராசி அதிபதி குருபெண் இராசி அதிபதி செவ்வாயாகவும் ஆண் இராசி அதிபதி குருவும் தங்களுக்குள் நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மேஷ இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் சிம்மம், விருச்சிகம். இதில் ஆண் மீனம் இராசி வரும் அப்போது மேஷ இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசியில்லை என்பதால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் அஸ்வினி நட்சச்திரம் பாத ரஜ்ஜூ - ஆணின் ரேவதி நட்சச்திரம் பாத ரஜ்ஜூ இரண்டும் ஒரே ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லை.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் அஸ்வினி நட்சச்திரமும் - ஆணின் ரேவதி நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் அஸ்வினி நட்சத்திரம் வாத நாடி ஆகும் - ஆணின் ரேவதி நட்சத்திரம் சிலேத்தும நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் அஸ்வினி நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் ரேவதி நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பொருத்தமில்லை.

பெண்ணின் அஸ்வினி நட்சத்திரமும் - ஆணின் ரேவதி திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 7 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் முழுமை பெறாததால் எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் அஸங்கம் (சேர்க்கை இல்லை).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


55 கோடி ரூபாயில் திருமணம் செய்து வைத்த தந்தை ரவி பிள்ளை ஜாதகம்...


55 கோடி ரூபாயில் திருமணம் செய்து வைத்த தந்தை ரவி பிள்ளை ஜாதகம்...

55 கோடி ரூபாயில் தனது மகளுக்கு கல்யாண செய்து வைத்தால் தற்போது அதிகமாக பார்க்கப்படும் நபர் இவரை பற்றி சின்ன முன்னோட்டதில் இருந்து ஆரம்பிப்போம், கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்தவர் இந்த ரவி பிள்ளை, கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு முடித்து கேரளாவில் முதலில் சீட்டு தொழில் (Chit Fund) ஆரம்பித்தார் பின் ரவி பிள்ளை தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமான  தொழிலில் கால் பதித்தார் எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை ஏற்பட்டது. 



பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. 



கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார், சவுதியில் இவரது ஆர்.பி குழுமம் தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.



கொஞ்சம் சிரமபட்டு தேடியதில் கிடைத்த ஜாதகம் என்பதால் சரியான பிறந்த நேரம் கிடைக்கவில்லை சுமாராக கருதப்படும் பிறந்த நேரம் என்பதால் நவாம்சம் போட்டால் தவறிவிடும் எனவே இராசிகட்டம் மட்டுமே கிடைத்துள்ளது இதன் அடிப்படையில் இராசிகட்டத்தில் அமைந்துள்ள யோகத்தை மட்டும் பார்ப்போம்.
ரவி பிள்ளை ஜாதகம்
  

துலாம் லக்னத்தில் 4 ஆம் ஸ்தானாதிபதி சனி பகவான் லக்னத்தில் உச்சம் பெற்றுள்ளார்  4 ஆம் ஸ்தானம் தான் வீடு, கட்டுமானத்துறைக்கு முக்கிய காரகத்துவம் பெற்ற ஸ்தானம் மேலும் கட்டுமானம் சார்ந்த பொறியியல் மற்றும் உதிரி பாகங்கள், அடிப்படை உலோகங்களுக்கு சனி  பகவான் காரகத்துவம் பெற்றவர் எனவே குருவால் 5ஆம் பார்வையாக பார்க்கபடும் உச்சம் பெற்றுள்ள அந்த சனி பகவானால் கான்டிரக்ட் தொழில், கட்டுமான  தொழிலில், மற்றும் கட்டமைப்பு, உருக்கு தொழிற்துறையில் வெற்றியும் மேலான அசைக்க முடியா நற்பலனும் பெற்றார். (சனி கொடுத்தாலும் கெடுத்தாலும் தடுப்பார் யார் என்பது ஜோதிட முதுமொழி)

தன  ஸ்தானாதிபதி செவ்வாய் 10ல் தொழில் ஸ்தானாதில் நீசபங்க ராஐயோகத்தில் உள்ளதாலும் கூட கரிம எண்ணெய்க்கு காரகத்துவம் பெற்ற கேதுவும் சேர்ந்தால் சிமென்ட், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையிலும் வெற்றி பெற்று பெரும் செல்வ சேர்க்கையை இந்த தொழில் பெற்றார்.

அடுத்து 9 ஆம் ஸ்தானாதிபதி புதன் பகவான் 11 ஆம் லாப (income) ஸ்தானாதிபதி உடன் சேர்ந்து அதில் 11 ஆம் லாப (income) ஸ்தானாதிபதி சூரியன் ஆட்சி பெற்று சிறந்த புதாத்திபத்திய யோகத்தை தந்துள்ளது அதனால் இவர் பெரிய கெட்டிக்காரர் ஆகவும் சாதகமான காரியக்காரர் ஆகவும் ஆக்குவார் மேலும் லட்சுமி யோகத்தையுதம் தரும் இருந்தாலும் துலாம் லக்னத்திற்கு 12க்குடையவராகவும் புதன் பகவான் வருவதால் சொந்த மண்ணில் தனது முன்னேற்றம் செய்ய முடியாமல் அந்நிய தேசத்தில் பெரும் தொழிலதிபராக வலம் வருகிறார் சொந்த தேசத்தில் சம்பாதித்தால் என்ன அந்நிய தேசத்தில் சம்பாதித்தால் என்ன ஆக சிறந்த வகையில் பொருளீட்டினால் போதும்.

நான் ஏற்கெனவே பல பதிவுகளில் சொன்னது போல் 9,10,11 இந்த மூன்று ஸ்தானாதிபதிகளும் ஒருவருக்கொருவர் நெருங்கிய பலமான தொடர்ப்பை பெறுகிறார்கள் அதாவது 9 ஸ்தானாதிபதி  புதன் பகவான் 11 ஆம் ஸ்தானாதில், 10 ஸ்தானாதிபதி  சந்திர பகவான் 9 ஆம் ஸ்தானாதில், 11 ஸ்தானாதிபதி 9 ஸ்தானாதிபதி அமர்ந்த நட்சத்திராதிபதி 10ல் அமர்ந்துள்ளார் ஆக இந்த பலமான பிணைப்பால் தொழிலில் பெரும் செல்வம் மற்றும் சமூகத்தில் பெரும் மதிப்பு, தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளார். மேலும் சொந்த மண்ணில் விரல்விட்டு எண்ணதக்க இடத்தில் பணக்காரராக உள்ளார். மேலும் இது இராசிகட்டத்திற்க்கான சுருக்கமான பலன் மட்டும் அம்ச கட்டங்களிலும் இவர்கள் இது போல் வலுத்திருப்பார்கள் அப்படி இருந்தால் மட்டுமே பெரும் வெற்றி பெற முடியும்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


Powered by Blogger