ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 1...


ஆன்மீகமும் ஜோதிடமும் எனது இரண்டு கண்கள் நான் ஜோதிடத்தை கற்றுவந்தாலும் ஜோதிடத்தின் உண்மையான ஆழம் அகலம் ஆன்ம தத்துவத்தை புரிந்த போதுதான் ஜோதிடம் புரிந்தது, ஜாதகம் என்றாலே जात jAta  என்றால் birth,  origin என்று அர்த்தம், अहम् aham என்றால் self, soul  என்று அர்த்தம், முழுமையாக சொல்வதானால் உயிர் உடலின் பிறப்பு அதன் விதி பாதை தான் ஜாதகம் அல்லது ஜென்மபத்ரிக்கா ஆக உயிரின் இயல்பை உணர்ந்தால் தான் உயிர் உடலின் வினைகள் புரியும் அது புரிந்தால் தான் ஜோதிடம் புரியும், ஆனால் ஒருவருக்கு பலன் சொல்வது என்பதுவும் அது அவருக்கு பொருந்தி வருவதும் அதாவது வாக்குபலிதம் என்று பொதுமக்கள் பேசிக் கொள்ளும் அந்த வாக்குபலிதம் என்பது இறைவன் ஒருவருக்கு தருவது அதுவும் ஒருவித பூர்வபுண்ணியம் அது வெறும் ஜோதிடம் கற்றுக் கொள்வதால் மட்டும் வருவதில்லை,

இறைவன் அந்த பூர்வபுண்ணியம் தந்து மேலும் உடல் உயிர் வினைகள் இவற்றின் கூட்டு இயக்கம் கட்டாயம் புரிய வேண்டும் ஆனால் இது ஆழமான அல்லது உயர்வான உண்மைகள் என்பதால் இது எல்லாராலும் விரும்ப படுவதில்லை ஆனால் இதனால் தான் ஒவ்வொரு மனிதரும் பக்குவபட்டுவர வேண்டும் சிறுவயது முதலே கவிதைகளை எழுதும் ஆற்றல் இறைவனால் எமக்கு வழங்கபட்டதால் சிறுவயது முதலே கவிதைகள் எழுதிக் கொண்டு வந்தேன் பின் ஆன்மீக அரவணைப்பும் வந்ததால் அதில் எமக்கு இறைவன் உணர்த்தியதை பல்வேறு தொகுப்பு பாடல்களாக எழுதி உள்ளேன் அதில் ஒன்று தான் இந்த ஜீவபோத சுத்தி,

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham)
1)
யார் நிலமாய் திரண்டார், யார் நீராய் சேர்ந்தார்
யார் தீயாய் எரிந்தார், யார் காற்றாய் பரந்தார்
யார் வெளியாய் நிறைந்தார், அணுவாய் சுழல்வார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who have unified land? Who have joined water?
Who have burned fire? Who have wide wind?
Who have all over space? Who have the rolling atom?
Blend within the heart It Sivam! It Sivam!

பாடலின் விளக்கம் -
அண்ட சாரசரங்களில் எல்லாம் நிலமாக திரண்டு இருப்பவர் யார், அங்கெல்லாம் நீராய் சேர்ந்து இருப்பவர் யார், அங்கு தீயாய் எரிந்து கொண்டிருப்பவர் யார், அங்கு இங்குமாக பரந்து காற்றாய் திரிபவர் யார், காணப்படுவதும் காணப்பாடாததுமாக உள்ள வெட்ட வெளியெங்கும் நிறைந்திருப்பவர் யார், ஒவ்வொரு அணுவாக இருந்து சுழண்டு கொண்டிருப்பவர் யார், ஒருவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்றால் உணர்வார் அது சிவமே அது சிவமே என்று.
சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழில் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 1..."

கருத்துரையிடுக

Powered by Blogger