ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 2...


ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

2)
யார் நிலத்தின் திண்மையனார், யார் தீயின் வெப்பமனார்
யார் நீரின் குளிர்ச்சியனார், யார் காற்றின் விரிவானார்
யார் வெளியின் நிறைவனார், அணு முதல் அண்டமானார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who have land's solid? Who have fire's hot?
Who have water's cold? Who have wind's extend?
Who had space's all over? Who have atom to universe?
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பாடலின் விளக்கம் -
அண்ட சாரசரங்களில் எல்லாம் திரண்டு உள்ள நிலத்தின் கெட்டித்தன்மையாய் இருப்பவர் யார், அங்கு தீயின் வெப்பத்தன்மையாய் இருப்பவர் யார், அங்கெல்லாம் நீரின் குளிர்ச்சி தன்மையாய் இருப்பவர் யார்,  காற்றின் விரிந்து சுருங்கும் தன்மையாய் இருப்பவர் யார், காணப்படுவதும் காணப்பாடாததுமாக உள்ள வெட்ட வெளியின் நிறைவானார் (நிறைவு என்றால் முழுமையும் ஆக்கிரமித்து உள் வெளியற்றும், அங்கு இங்கு என்ற பேதமற்றும் நிற்கும் நிலை), ஒரு அணு முதல் அணுக்கள் கூடிய கூட்டம் முதல் அது விரிந்து பரந்து நிற்கும் எல்லையாகவும் ஆனவர் யார், ஒருவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்றால் உணர்வார் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 1...

0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 2..."

கருத்துரையிடுக

Powered by Blogger