ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 11...


ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(11)
யார் உயிராய் வெளிப்பட்டார், உயிரை வெளிப்படுத்தினார்
யார் உயிராய் இருந்தார், யார் உயிரை இருக்க வைத்தார்
யார் உயிரை கவர்ந்தார், உயிராய் ஓடும் வேளையிலே
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who appeared living being? Who revealed living being?
Who live the being? Who put there a being?
Who take over to your life? When you live a being
Blend within the heart It Sivam! It Sivam! 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
யார் ஒவ்வொரு உயிர் என்ற நிலையில் வெளிப்பட்டுள்ளார், யார் ஒவ்வொரு உயிர் என்ற நிலையை வெளிப்படுத்தி உள்ளார், யார் ஒவ்வொரு உயிர் என்ற நிலையில் இருக்கிறார், யார் ஒவ்வொரு உயிரையும் உயிர் என்ற நிலையில் இருக்க வைத்துள்ளார், யார் ஒவ்வொரு உயிரையும் மீண்டும் கவர்கின்றார் (seizing), உயிர் என்ற நிலையில் இருக்கும் வேளையிலே ஒவ்வொருவரும் அவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்று உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.

மேலே இதற்கு முன் சொல்லப்பட்ட பாடல்களுக்கு காரண கர்த்தனாக தோன்றுவது உயிர் என்று முதலில் உணரப்படும் பின் அந்த உயிரும் சுயமாக எதையும் எடுத்துக்கொள்ள உரிமையில்லாதது என்பதை காட்டவே 11வது பாடலின் நோக்கம்.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 11..."

கருத்துரையிடுக

Powered by Blogger