பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் சித்திரை - திருமண நட்சத்திர பொருத்தம்...

பெண் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் - ஆண் சித்திரை - திருமணப் பொருத்தம் நட்சத்திர பொருத்தம்...
முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரத்திலிருந்து - ஆணின் சித்திரை நட்சச்திரம் வரை எண்ண 12 ஆக வருவதால்  தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்

இதில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் ராக்ஷஸ கணம் - ஆணின் சித்திரை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம்  உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் சித்திரை நட்சச்திரம் வரை எண்ண 12 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் முதல் ஆணின் சித்திரை நட்சச்திரம் வரை எண்ண 12 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் மிருகப் பிரிவு ஆடு ஆகும் - ஆணின் சித்திரை நட்சச்திரம் மிருகப் பிரிவு புலி ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கன்னி இராசி ஆனால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 5 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் துலாம் இராசி ஆனால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 6 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி கன்னி இராசி ஆனாலும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனும் புதனும் தங்களுக்குள் நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

பெண் ஆண் இருவரும் ரிஷப இராசி துலாம் இராசி ஆனாலும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனாக வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம். 
இதில் பெண் ரிஷப இராசியாக வருவதால் ஆண் கன்னி இராசியாகவோ வருகின்றபடியால் வசிய பொருத்தம் இல்லை.
இதில் பெண் ரிஷப இராசியாக வருவதால் ஆண் துலாம் இராசியாகவோ வருகின்றபடியால் வசிய பொருத்தம் உண்டு.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ - ஆணின் சித்திரை நட்சச்திரம் சிரசு ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் கார்த்திகை நட்சச்திரமும் - ஆணின் சித்திரை நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி ஆகும் - ஆணின் சித்திரை நட்சத்திரம் பித்த நாடி ஆகும் பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் கார்த்திகை நட்சத்திரம் பால் இருக்கும் வகை - ஆணின் சித்திரை நட்சத்திரம் பால் இல்லாத வகை பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனதால் மேல் சொன்னபடி விருட்ச பொருத்தம் உண்டு.

பெண்ணின் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் நட்சத்திரமும் - ஆணின் சித்திரை 1,2 ஆம் பாதம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் சம அளவில் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் மத்திமம் (சமமான பொருத்தம் உள்ளது).

பெண்ணின் கார்த்திகை 2,3,4 ஆம் பாதம் நட்சத்திரமும் - ஆணின் சித்திரை 3,4 ஆம் பாதம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  9 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 




ஜோதிடமும் அரசியலும் பகுதி 2 - ஊசி முனை நிலத்தைக்கூட கொடுக்க முடியாது…

ஜோதிடமும் அரசியலும் பகுதி 2 - ஊசி முனை நிலத்தைக்கூட கொடுக்க முடியாது…



பன்னிரண்டு இராசிகளுக்கும் மூல அரசியல் பிரிவு -
ஒருவரது ஜாதகத்தில் முக்கியமாக அவர்களின் லக்னம், ராசி, லக்னாதிபதி, ராசியாதிபதி அவர்களின் பலம் பொருத்தும் ஒருவரது அரசியல் நடத்துமுறையும் மற்றும் கேந்திர ஸ்தானம் அந்த ஸ்தானத்தின் அதிபதிகள் கொண்டு நேரடி அரசியலும் மற்றும் மறைவு ஸ்தானம் அந்த ஸ்தானத்தின் அதிபதிகள் கொண்டு மறைமுக அரசியலையும் தெரிந்துகொள்ளலாம்.

சிம்மம் ராசி = நீயா நானா அரசியல்
கடகம் ராசி = நீயா நானா அரசியல் + நீயா அவனா அரசியல்
மேஷம், விருச்சிகம் ராசி = நீயா நானா அரசியல்
மிதுனம், கன்னி ராசி = நீயா அவனா அரசியல்
தனுசு, மீனம் ராசி = நீயா அவனா அரசியல்
ரிஷபம், துலாம் ராசி = நீயா அவனா அரசியல் + நானா அவனா அரசியல்
மகரம், கும்பம் ராசி = நானா அவனா = அரசியல்

தற்போதைய அரசியல் ஜோதிட விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு முன் பழம் வரலாற்று அணுகுமுறை தெரிந்துகொள்வது முக்கியம் -

அரசியல் பலம் என்பது நவகிரகங்களின் சங்கம பலமும் மற்றும் 12 இராசி பலம், வர்க்க பலங்கள் என அனைத்து அம்சங்களும் சேர்ந்து பார்க்க வேண்டும், ஏனென்றால் காலங்கள் தோறும் அரசியலும் அதனால் ஈட்டபடும் அரசாங்கமும் அதன் அதிகாரங்களும் மாறிக்கொண்டே வருகின்றன, நம் முன்னோர்கள் எழுதி ஜோதிட சாஸ்திரங்களின் காலங்களில் இருந்த  அரசியலமைப்பு முறை என்பது பெரும்பாலும் போர்முறைகளினாலும், படைபலத்தினாலும், ராஐதந்திர யுத்தமுறைகளினாலும் மற்றும் கூட்டுயுத்தங்களினால் தான்  பெரும்பாலும் அரசாங்கமும் அதன் அதிகாரங்களும் மாறிக்கொண்டே வந்துள்ளன கடைசியாக ஆண்ட ஆங்கிலேயர்கள் வரை இதுதான் முறையாக பெரும்பாலும் இருந்தது,

அதற்கு சிறந்த உதாரணமாகும் மகாபாரத உரையாடல் இது -
துரியோதனன் : ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது
கிருஷ்ணன் : அப்படியானால் யுத்தம் நிச்சயம்
துரியோதனன் : அது தான் எங்களின் விருப்பமும்.
தூது வந்த கிருஷ்ணரை அவமதித்து அனுப்பு விட்டான். பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்பது என முடிவு செய்தார்கள். (இதை தான் தற்போதைய அரசியல்வாதிகள் இப்போது "ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்க கூடாது" என்று சொல்கிறார்கள்)

எனவே அந்த கால போர்முறைகள், படைபலத் திறன்கள், யுத்தமுறைகளின் மற்றும் அரசு உருவாக்கும் முறையின் படியும் ஜோதிட காரகத்துவங்களும் அதை கொண்டு பலன் அறியும் முறைகளும் இருந்தது,  யுத்தமுறைகளினால் அரசு உருவாக்கும் முறையின் காரணமாக சத்திரிய கிரகங்கள் ஆன சூரியன், செவ்வாய் முதல் முக்கியத்துவமும் அதற்கு அடுத்து சனி, குரு, இராகு, புதன் கொடுக்கபட்டது அதாவது அதன் வரிசைபடுத்தினால்

சூரியன் = யுத்த தலைமை, அரசாங்க தலைமை
செவ்வாய் = யுத்த தளபதி, அரசாங்க மற்றும் எல்லை பாதுகாப்பு
சனி = சிப்பாய்கள் & யுத்த தளவாடங்கள், ஆயுதங்கள், சட்ட பாதுகாப்பு
குரு = ஆதாரங்களை திட்டமிடல் மற்றும் தந்திர யுத்தமுறைக்கு உதவுபவர், சட்டம் இயற்றல்
இராகு =  யுத்த தளவாடங்கள், ஆயுதங்கள், கப்பற்படை
புதன் = புதிய மற்றும் இளம் போர்வீரர்கள்

12 இராசிகளில் = அரசியல் முக்கியத்துவம்
முதன்மையான முக்கியத்துவம் - சிம்மம், மேஷம், தனுசு
அதற்கு அடுத்து - மிதுனம், விருச்சிகம், மகரம் கும்பம் (உத்திராடம், அவிட்டம், சதயம்)

இந்த அடிப்படையில் நவகிரகங்களின் சங்கம பலமும் மற்றும் 12 இராசி பலம், வர்க்க பலங்கள் என அனைத்து அம்சங்களும் சேர்த்து அந்த கால அரசு உருவாக்கும் முறை, அரசியல், யுத்தங்கள் பார்க்க பட்டுவந்தன ஆனால்

பின்னர் அதே ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ஆங்கில அரசியலமைப்பு சட்டம் ( English Constitutional Law,  English Common Law ) இதன் அடிப்படை கூறுகள் பரந்த அளவு உலகில் ஏற்றுக்கொள்ளபட்ட மக்களாட்சி முறையானது 19 ஆம் நூற்றாண்டுக்கு பின் பரவலான பலநாடுகளில் சட்டங்கள் ஆனது, இதை பின்பற்றி இந்திய சுதந்திரம் பெற்ற பின் நமது தேசமும் மக்களாட்சி அரசியலமைப்பு முறைக்கு மாறியது இதனால் ஜோதிட அரசியலும் அதன் காரக பலன் காணும் முறையும் அந்த கால அடிப்படையை தவிர்த்து மற்ற விஷயங்களில் சற்று அதிகமாக மாறிவிட்டது,  


உடல்பலத்தாலும், ஆட்களின் யுத்தபலத்தாலும், இனத்தின் ஒற்றுமை போராட்ட பலத்தாலும் அரசாளும் அதிகாரம் நிர்ணயிக்கபட்ட முறை மாறி நாட்டின் ஒவ்வொரு மனிதனின் விருப்பத்தை ஒட்டி அதன் தொகுப்பாக அனைத்து மக்களின் பொது விருப்பத்தை ஒட்டியும் அந்த விருப்ப ஓட்டு போடுவதன் மூலமாக அரசாளும் அதிகார பிரதிநிதிகள் ஆக்கபட்டனர் அந்த அதிகார பிரதிநிதிகளும் மக்களில் ஒருவாராக இருந்து தேர்ந்து எடுக்கபட்டு வரும்படி அமைக்கபட்டன அதனால் பழைய முறையில் முக்கியத்துவம் இழந்து இருந்த சனி, சந்திரனும், சுக்கிரனும், செவ்வாய்  ஆகிய கிரகத்திற்கு தற்கால அரசியலில் முக்கிய பாத்திரங்களாக மாறிவிட்டன, வாக்கு ஸ்தானங்களான ஆன 2,3 ஆம் ஸ்தானங்களும் மிக முக்கிய பாத்திரங்களாக மாறிவிட்டன.

(கூடுதல் செய்தி - தமிழ்நாட்டை ஆண்டுவந்துள்ள கலைஞர் கடக லக்னம் லக்னாதிபதி சந்திரன் உச்சம், ஜெயலலிதா 10ல் சுக்கிரன் உச்சம்.
கவிஞர்களான சுக்கிரன், சந்திரனை லக்னத்தில் வைத்திருந்தார் அடல் பிஹாரி வாஜ்பாயி.
அதே போல் புரட்சிகள் செய்து அரசாளும் உரிமை அடைந்தவர்களும் உண்டு
புரட்சிக்கு காரகர்கள் ஆன செவ்வாய், சனி  
வங்காளத்தில் ஜோதிபாசு = 10ல் சனி, ம ம்தா பேனர்ஜி - சனி உச்சம், செவ்வாய் சனி வீட்டில்,  
ஆந்திராவில் - சந்திரசேகர் ராவ் - சனி உச்சம், செவ்வாய் ஆட்சி வீட்டில்)

தொடரும்...


மகர இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள்…

மகர இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு இராசியில் அமரும் போது ஒவ்வொரு விதமான பலம் மற்றும் பலவீனங்களை அடைகின்றன இது ஒரு ஜாதக கணிதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன அதாவது ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்திலும் ஒரு கிரகம் வந்து சேர்வதன் மூலம் அந்த இடத்திற்கு தக்கவாறு ஒரு அவஸ்தை (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) அடைகின்றன, அதை நம்முன்னோர்கள் ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான அவஸ்தைகளாக பிரித்துள்ளனர், இந்த வலைபதிவில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்தின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகளை பார்ப்போம்.

ஆட்சி = ஒரு கிரகத்தின் சொந்தமான வீடு, ஒரு கிரகத்தின் உயர் ஆளுமைக்கு உட்பட்ட இராசி. ஒரு கிரகத்தின் கிரணங்களின் தன்மைக்கு ஏற்ற இராசி.
உச்சம் = ஒரு கிரகத்தின் மிக உயர்ந்த அதிக கிரணங்கள் வெளிப்படும் இராசி.
நட்பு = ஒரு கிரகத்தின் பொது கிரணங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படாத இராசி.
பகை = ஒரு கிரகத்தின் பொது கிரணங்களுக்கு சிதறுவதால் தொந்தரவு ஏற்படும் இராசி.
சமம் = ஒரு கிரகத்தின் கிரணங்களுக்கு சமமான அளவில் வெளிப்படும் இராசி.
நீசம் = ஒரு கிரகத்தின் பொது கிரணங்களே மறைவு அல்லது தடுப்பு, மிகக்குறைவு ஏற்படும் இராசி

மகரம் ராசி மண்டலத்தில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள் -

கோள்கள்
அவஸ்தைகள்
சூரியன்
பகை
சந்திரன்
சமம்
செவ்வாய்
உச்சம்
புதன்
சமம்
வியாழன்
நீசம்
சுக்கிரன்
நட்பு
சனி
ஆட்சி
ராகு
நட்பு
கேது
நட்பு

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


மாந்தி ஐந்தில் (5ல்) இருந்தால் ஏற்படும் பலன்கள்...

மாந்தி ஐந்தில் (5ல்) இருந்தால் ஏற்படும் பலன்கள்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 36 - ஜெய யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 36 - ஜெய யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


ஜெய யோகம் -
ஜென்ம லக்னத்திற்கு 6 ஆம் ஸ்தானாதிபதி நீசம் அடைந்து, 10 ஆம் ஸ்தானாதிபதி முழுமையாக உச்சம் அடைந்து அமைந்திருந்தால் இந்த ஜெய யோகம் ஏற்படுகிறது, இது அனைத்து லக்னங்களுக்கும் பொருந்தாது மற்றும் மற்ற வர்க்க சக்கரங்களில் பலவீனப்பட்டுவிடக் கூடாது என இந்த யோகம் முழு பலம் அடைய பலவிஷயங்களை பார்க்க வேண்டி வரும்.

இதன் பலன்கள் -
வெற்றிகளை தனக்கு உரியதாக்கி கொள்ளும் தகுதி உள்ளவராக இருப்பார், எதிரிகளை வெல்லும் யோகம், எடுத்து காரியங்கள் அனைத்திலும் முடிந்த அளவுக்கு காரிய சித்திகளும் அதில் சாதனைகள் அதற்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கும்.


Powered by Blogger