ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 10...

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 10...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(10)
யார் விந்துவாய் திரண்டார், கருவாய் நின்றார்
யார் விந்துவை திரட்டினார், கருவை நிறுத்தினார்
யார் ஓட்டினார், கூட்டினார், சினையாக்கினார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who stand semen alive in the body? Who stand ovum alive in the body? 
Who made semen from the body? Who made ovum from the body?
Who drove semen and combined both? Who develop the Zygote?
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
யார் உயிர்சக்தி பெற்ற விந்துவாகவும் விந்துக்களின் திரவமாகவும் திரண்டு இருப்பது,  பெண் சினைப்பையில் உண்டாகும் உயிர்சக்தி பெற்ற சினை முட்டையாக உருவாகி நின்றது யார், ஒரு ஆணின் உடலில் இருந்து விந்துவையும் விந்துக்களின் திரவத்தையும் திரட்டியது யார், ஒரு பெண்ணின் உடலில் இருந்து சினை முட்டைகளை உருவாக்கியது யார், இந்த இரண்டையும் அது உருவான நோக்கத்தை நோக்கி ஓட்டியது யார், அந்த நிகழ்வில் உருவாக தக்க உயிரை சினை முட்டையில் கூட்டியது யார், அதை ஒரு முழு துடிப்புடன் கூடிய உயிர்உடல்கருவாக செய்தது யார், ஒருவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்றால் உணர்வார் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 10..."

கருத்துரையிடுக

Powered by Blogger