கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 2

கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 2 


கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 1 படிக்காதவர் படித்துவிட்டு பின் பகுதி 2 தொடரலாம். 

பணத்தை பெருமளவில் சேர்க்க ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆசை, ஆர்வம் மற்றும் திறமை, தகுதிகள் தான் காரணம் என்று என்ன சார் நீங்க ஒரு தன்னம்பிக்கை சொற்பொழிவாளர் போல பேசுகிறீர்களே என்று உங்களுக்கு தோன்றலாம் ஆம் உலகின் தற்போதை முதல் பணக்காரனாக திகழ்ந்து கொண்டிருக்கும் பில்கேட்ஸ் எந்த வகையிலும் மகாலட்சுமி, குபேரன் இன்னும் உள்ள எந்த பணக்கார தெய்வ வடிவங்களையும் வழிபட்டவரோ விரதமிருந்தவரோ இல்லை. அப்படி இல்ல சார் அவருக்கென்று வேறு ஒரு தெய்வ மகான் இருந்தார் அவரின் கிருபையால் இந்த செல்வ வசதியை அடைந்தார் என்று கூட சிலர் கருதலாம். அப்படியானால் தெய்வ நம்பிக்கையற்ற புத்த மற்றும் கன்பூசியஸ் போன்ற தத்துவ நெறி சார்ந்த நாடுகளில் வளர்ந்த எத்தனையோ கிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளை (சீனா, ஜப்பான்) சேர்ந்த பெரும் பணக்காரர்கள் உலக அளவில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள்.

இப்படியேல்லாம் சொல்வதால் செல்வ வசதி வேண்டி செய்யப்படும் வழிபாடுகளையோ, ஹோமங்களையோ அல்லது விரதங்களையோ வீண் என்று நான் சொல்ல வரவில்லை அதாவது இதற்க்கெல்லாம் மேலாக ஒருவனுக்கு இந்த பிறவியில் பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற விதி (செல்வம் சேருவதற்க்கான புண்ணிய கர்மா) அமைய வேண்டும், அந்த விதி இருக்குமானால் மீதி வழிபாடுகள் எல்லாம் வெறும் துணை ஊக்கிகள் தான். சிலருக்கு தந்தை, தாதா என முதாதையர்களின் வழியாக செல்வ வசதி, சொத்துகள் வரலாம் அப்படி வந்தாலும் அதுவும் அவருக்கு தொடந்து இருக்க விதி ஒத்திருக்க வேண்டும். கர்மாவை விரித்து கணித்து இயம்புவதும் அது எந்த கிரத்தின் வழியாக எவ்வாறான கர்மா என்றும் விரித்து கணித்து இயம்புவது தான் ஜோதிடக் கலையே.

பணத்திற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது?

உண்மையில் பணம் வெறும் காகிதமே, காசு வெறும் உலோகமே, வங்கி கணக்கு மதிப்புகள் வெறும் எண்களே அப்படியானால் அதற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது? இப்போது ஒரு சித்தர் பாடலை இங்கே சுட்டிக்காட்டிகிறேன்

 ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

இதன் பொருள் -
ஊரிலே இருக்கும் மனிதர்கள் ஒரு மனதாய் ஒன்று கூடி கோயில் தேரிலே கனமான கயிற்றை இணைத்து அந்த தேரின் மேலே செம்பு வெங்கலத்தால் ஆன உலோகத்தை வைத்து கடவுள் என்று சொல்லி இழுக்கின்றீர்கள் யாவராலும் அறிந்து கூற முடியாத பழம்பெரும் தெய்வத்தை அறியாமையால் குழந்தைதனமாக ஒரு செம்பு வெங்கலத்தால் ஆன உலோகத்தில் வைத்து இந்த மனிதர்கள் செய்கின்ற காரியத்தை என்னவென்று சொல்வது.

அதாவது எல்லையற்ற பரம்பொருளை சைவத்தில் பரமன், விஸ்வநாதன் என்றும் வைணவத்தில் பரந்தாமன், விஸ்வரூபன் என்றும் அழைக்கப்படும் அந்த எல்லையற்ற பரம்பொருளை மக்கள் தங்களின் வழிபடும் வசதிக்காக மற்றும் தங்களின் கோரிக்கையை கேட்டு அருளும் எளிய வடிவத்தில் சுருக்கி வழிபடுகின்றனர் அதனால் மக்களின் அங்கீகாரத்தால் சிலைகள் தெய்வ பாவனைகளை கொள்கின்றது, அதன் பின் ஒவ்வொருவரின் கோரிக்கையை கேட்டு சிலையினிடத்தும் மற்றும் அவர் அவர் உள்ளத்துள்ளும் இருந்து கோரிக்கைகளுக்கான அருளும் தருகிறார்.

அது போலவே மக்களின் அங்கீகாரத்தால் மற்றும் மக்களின் பிரதிநிதித்துவ அரசுகளின் அங்கீகாரத்தால் வெறும் காகிதமும், உலோகமும்,  வங்கி கணக்கில் உள்ள எண்களும் நான் முன்னவே குறிப்பிட்டுள்ளபடி மனிதனுக்கு தேவையான நீர், உணவு தானியம், நெருப்பு, ஆடை, நிலம் என அனைத்து உடைமைகளையும் வாங்க விற்க மற்றும் பயன்படுத்த உதவும் காசு, பணத்தாள் அல்லது பணச்சீட்டு என்ற ஒரே இடைபேரக் கருவியாக அங்கீகாரிக்கபடுகிறது, பொது மக்களாலும் அரசுகளின் அங்கீகாரத்தாலும் இவைகளுக்கு மதிப்பு உண்டாகிறது.

பணம் வரும் வழி என்ன?

காசையோ, பணத்தாளையோ அல்லது பணச்சீட்டையோ ஒரு தனிமனிதனுக்கு தயாரிக்கும் திறன் இருந்தாலும் ஒரு சில மனிதர்களால் தயாரிக்கபடும் பணம் அது போலி பணமாக கருதப்பட்டு அவர்களுக்கு அரசால் தண்டனையே மிஞ்சும். அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு விநியோகிக்கப்படும் பணமே பணம் அதை அரசாங்கம் யாருக்கும் சும்மா விநியோகிக்க முடியாது எனவே அது பண்ட மாற்றும் மற்றும் சேவை பணிகளின் மூலமாக அது பொது மக்களிடம் வந்து சேர்கிறது. பொது மக்களிடம் வந்து சேரும் அது அதிக உற்பத்தி அதனால் விற்பனை மற்றும் அதிகமாக சேவைகளின் காரணமாக ஒரு தனி மனிதனிடம் குவிகிறது அதனால் பணக்காரன் உருவாகிறான்.

உதாரணமாக ஒரு பொருளை உற்பத்தி செய்து அதை விற்கும் ஒரு வியாபாரியை எடுத்துக் கொள்வோம் அவரின் பொருள் ஒரு பெரும்விற்பனர் (wholesaler) அடைந்து அது பின் ஒரு சிறுவிற்பனர் (retailer) அடைந்து கடைசியில் ஒரு வாடிக்கையாளரால் வாங்கப்பட்டு அந்த ஒரு பொருளின் மூலம் பெற்ற நிகரலாபம் 1000 ரூ அது சிறுவிற்பனர்க்கு கொஞ்சமாக மற்றும் பெரும்விற்பனர்க்கு கொஞ்சமாக பிரிந்து இறுதியில் உற்பத்தியாளருக்கு 500 ரூபாயாக வந்து அடைகிறது என்று வைத்துக்கொள்வோம் இப்படியாக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் இருந்து சேர்க்க பட்ட 500 ரூபாய் இறுதியில் ஒரு பெரும் எண்ணிக்கையை அடைகிறது.

மேலும் ஒரு உதாரணமாக ஒரு பெரும் நடிகரிடம் இருக்கும் கோடிகள் எப்படி வந்தது, படத் தயாரிப்பாளர் தந்தது, படத் தயாரிப்பாளருக்கு பணம் எப்படி வந்தது, திரைபட விநியோகிஸ்தர் தந்தது, திரைபட விநியோகிஸ்தருக்கு பணம் எப்படி வந்தது, திரையரங்க உரிமையாளர் தந்தது, திரையரங்க உரிமையாளருக்கு பணம் எப்படி வந்தது, திரைப்படம் பார்த்த நீங்கள் தந்தது அப்படியானால் உங்களின் பணப்பையில் இருந்த பணம் பலரையும் கடந்து அந்த பெரும் நடிகரின் பாதுகாப்பு பேழையை (Safety Locker) சென்று அடைந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

குவிதல், குவிப்பு, குவித்தல் என்ற வார்த்தைகள் ஜோதிடத்தில் முக்கியமானவை அந்த விஷயத்தில் பணத்தை குவிப்பு, குவித்தலுக்கு குபேர யோகமாக கொள்ளப்படுகிறது. ஜோதிடத்தில் இந்த பணத்தை குவிப்பதற்கு தேவையான கதிர்வீச்சு பலத்தை

1) ஒரே ஒரு கிரகத்திற்கு பல கிரகங்கள் சேர்ந்து அந்த சக்தியை தரும்
2) இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் பலமாக சேர்ந்து அந்த சக்தியை தரும்
3) ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கிரகங்கள் அமர்ந்து அந்த சக்தியை தரும்
4) சரியான நட்சத்திர அறைகளையும் அல்லது சரியான வீட்டை பல கிரகங்கள் அடைந்தும் அந்த சக்தியை தரும்

இப்படி பல வழிகளை சொல்லிக்கொண்டு போகலாம். இந்த கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் பதிவுகளில் ஒரு கோடீஸ்வரரின் ஜாதகத்தை எடுத்து அதில் உள்ள சிறப்புகளை மோலோட்டமாக பார்த்து வரப்போகிறோம். உலக அளவில் ஜாதகங்களை எடுத்து பார்க்க இருப்பதால் பல புதிய தொழில்கள் அதில் பணக்காரர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் பூரட்டாதி - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் பூரட்டாதி - திருமண நட்சத்திர பொருத்தம்

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2, 4, 6, 8, 9, 11,13, 15,18, 20, 24, 26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆணின் பூரட்டாதி நட்சச்திரம் வரை எண்ண 21 ஆக வருவதால் இருவருக்கும் தினப்பொருத்தம் இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் பூரட்டாதி நட்சத்திரம் மனுஷ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் பூரட்டாதி நட்சச்திரம் எண்ண 21 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் பூரட்டாதி நட்சச்திரம் எண்ண 21 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.  27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் பூரட்டாதி நட்சச்திரம் மிருகப் பிரிவு சிங்கம் ஆகும் எனவே இரண்டும் பகை மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் கும்பம் இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 10 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.
பெண் ரிஷப இராசி ஆகி ஆண் மீனம் இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 11 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆண் கும்பம் இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு சனி நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.
பெண் ரிஷப இராசி ஆண் மீனம் இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு குரு (வியாழன்) சம உறவுமுறை மற்றும் குருவுக்கு (வியாழன்) சுக்கிரன் பகை உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் இல்லை.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.  
இதில் பெண் ரிஷப இராசி ஆண் கும்பம் இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.
இதில் பெண் ரிஷப இராசி ஆண் மீனம் இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் பூரட்டாதி நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் பூரட்டாதி நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் மட்டும் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் பூரட்டாதி நட்சத்திரம் வாத நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறு நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் பூரட்டாதி நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இருக்கும் மரம் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் பூரட்டாதி 1,2,3, ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் பூரட்டாதி 4 ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  7 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




இந்திய மற்றும் மேற்கத்திய ஜோதிடத்தில் 12 ஸ்தானங்களின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் விளக்கம்…

இந்திய மற்றும் மேற்கத்திய ஜோதிடத்தில் 12 ஸ்தானங்களின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் விளக்கம்…

பராசர, வாரஹ, பிருகு மகரிஷிகள் தங்களது ஜோதிட சாஸ்திரத்தில்  குறிபிட்டுள்ள அடிப்படையான 12 வீடுகளை (ஸ்தானங்கள்) கேந்திரம், கோணம், உபஜெயம், பணப்பரம் போன்று பிரித்து உள்ளனர். அவ்வாறான ஒரு மாற்று பிரிவை மேற்கத்திய ஜோதிடத்தில் அடிப்படையான 12 வீடுகளை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர் (Four Divisions)அவைகளின் அடிப்படையை இப்போது அடையாள படுத்தபடுகிறது.
1st Division = "The Houses of Life" (1st, 5th, 9th)
1 வது பிரிவு = "வாழ்வு சார்ந்த வீடுகள்" (1ஆம், 5ஆம், 9 ஆம் வீடுகள்) - அதாவது இது ஒரு மனிதருக்கு தேவையான உடல் பலம், மன ஆற்றல், உற்சாகம், உந்து சக்தி, சமய நம்பிக்கை, ஆன்மீக பலம், வாழுவதற்கு தேவையான உத்வேகம் தரும் வீடுகளாக சுட்டிகாட்டப்படுகின்றன.

2nd Division = "The Houses of Substance" (2nd, 6th, 10th)
2 வது பிரிவு = "பொருள் சார்ந்த ஒரு வீடுகள்" (2 ஆம், 6 ஆம், 10 ஆம் வீடுகள்) - அதாவது இது ஒரு மனிதருக்கு தேவையான உலகியல்ரீதியான பொருள் சார் உடைமைகள், பண சேமிப்பு. வேலை செய்யும் திறம், சுய தொழில். மரியாதை. 6 ஆம் வீட்டை உணவு, உடை, சுகாதாரம் முதலிய வசதிகளுடன் இங்கு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

3rd Division = "The Houses of Relationships" (3rd, 7th, 11th)
3 வது பிரிவு = "உறவுககளுக்கான வீடுகள்" (3 ஆம், 7 ஆம், 11 ஆம் வீடுகள்) - அதாவது இது ஒரு மனிதருக்கு வீட்டில் உள்ள இரத்த உறவுகள், சகோதரர்கள், சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள் முதலிய உறவுகளை காட்டும் வீடு.  சொந்த அக்கம்பக்கத்தினர் அடங்கும் சமூக தொடர்புடையதாக நபர்கள். மனைவி மற்றும் நண்பர்கள், பங்குதாரர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள், ஆலோசகர்கள் சுட்டிக்காட்டு வீடுகளாக உள்ளது

4th Division = "The Houses of Endings"( 4th, 8th, 12th)
4 வது பிரிவு = "எல்லையை காட்டும் வீடுகள்" (4 ஆம், 8 ஆம், 12 ஆம் வீடுகள்)  - அதாவது இது ஒரு மனிதருக்கு
சுகாதாரம், முதுமை, இறுதிகாலம், உறக்கம், மோட்சம், உச்சமான அல்லது முடிவான இன்பங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டும் வீடுகளாக உள்ளது.

இந்த பிரிவுகளில் பல வேதஜோதிடத்தை ஒத்திருக்கும் சில கலாசார மற்றும் கால எல்லைகளை ஒத்தும் மற்றும் நமது அதி உன்னத ஆத்மஞானிகள் மற்றும் மகரிஷிகளின் அருள் பங்களிப்பு பிரசாதத்தால் பல நமது வேதஜோதிடத்தில் சில விஷயங்கள் உயர்வு நிலையில் தனித்து சிறப்போடு இருக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மிதுனம் & துலாம், மிதுனம் vs துலாம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & துலாம், மிதுனம் vs துலாம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ துலாம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.


ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 9 - கேந்திரசர்ப்ப தோஷம்…

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 9 - கேந்திரசர்ப்ப தோஷம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


கேந்திரசர்ப்ப தோஷம்
லக்னம் மற்றும் லக்னத்திற்கு 4, 7, 10 ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கபடுகிறது, இந்த கேந்திர ஸ்தானங்களில் மூன்று சாதகமற்ற கிரகங்கள் குறைந்தது மூன்று கேந்திரங்களில் அமைந்துள்ளது போது அது கேந்திரசர்ப்ப தோஷம் ஆகும். சாதகமற்ற கிரகங்கள் என்பது ஒவ்வொரு ஜாதகத்திற்கு தக்கவாறு மாறுபடலாம் பொதுவாக சாதகமற்ற கிரகங்கள் என்று அழைக்கப்படுவது முக்கியமாக இராகு, கேது அதற்கு அடுத்து சனி, சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆகும்.

இதன் பலன்கள் -
மிக மந்தம் அல்லது மிக வேகம் காட்டக்கூடிய தன்மை. கள்ளத்தனம். நேர்மையற்ற அல்லது ஒழுங்கற்ற காரியங்கள். தந்திரமான அறிவு, தடைகள் சுற்றி நிறைந்த வாழ்க்கை ஆனாலும் அதை தாண்டி வாழும் விவேகம் உடையவர். சூழலுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வார் போன்ற பலன்கள் நடக்கும் சுப குரு கோள் பார்த்தால் தீமைகள் குறையும்.


Powered by Blogger